காதலியிடம் ‘ப்ரபோஸ்’ செய்வதற்காக போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியதாக இளைஞர் மீது குற்றச்சாட்டு…!!
அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது காதலியைத் திரு மணம் செய்து கொள்ளும் விருப் பத்தை தெரிவிப் பதற்காக போக்கு வரத்து நெரிசலை ஏற்படுத்தியதாக குற்றஞ் சுமத்தப் பட்டுள்ளார்.
இந்த இளைஞர் போக்குவரத்து மிகுந்த வீதியொன்றில் வைத்து தனது காதலிக்கு “ப்ரபோஸ்” செய்தமையே இதற்கான காரணம். கடந்த டிசம்பர் மாதம் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
டெக்ஸாஸ் மாநிலத்தின் ஹொஸ்டன் நகரைச் சேர்ந்த 25 வயதான விதால் வலேடெரெஸ் எனும் இளைஞர் மீதே இக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
விதால் வலேடெரஸின் நடவடிக்கையினால் வீதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், ஒழுங்கீன நடவடிக்கை மேற்கொண்டு போக்குவரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப் பட்டது.
கடந்த வாரம் நீதிமன்றத்தில் இவ் வழக்கு விசாரிக்கப்பட்டபோது, அவர் தனது நடவடிக்கைக்காக மன்னிப்புக் கோருவதுடன், 32 மணித்தியாலம் சமூக சேவையில் ஈடுபட்டால் இவ் வழக்கு கைவிடப்படும் எனத் தெரிவிக்கப் பட்டது. அதையடுத்து, உடனடியாக அவர் செய்தியாளர்கள் முன்னிலையில் மன்னிப்பு கோரினார்.
Average Rating