தண்டையார்பேட்டையில் குடும்பதகராறில் பெண் தீக்குளிப்பு…!!
Read Time:1 Minute, 18 Second
தண்டையார்பேட்டை நேதாஜிநகரை சேர்ந்தவர் நாகேந்திரன். ரிக்சா தொழிலாளி. இவரது மனைவி மாரி (42) நாகேந்திரனுக்கு குடிபழக்கம் உண்டு. இதனால் 2 பேருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று நாகேந்திரன் மது குடித்து விட்டு வந்தார். இதை மாரி தட்டிக்கேட்டார். அப்போது நாகேந்திரனுக்கும் மாரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் நாகேந்திரன் வெளியே சென்று விட்டார். இதனால் மனம் உடைந்த மாரி வீட்டில் இருந்த மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மாரியை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் உயிருக்கு போராடி வருகிறார்.
இது குறித்து ஆர்.கே. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Average Rating