யாழ் இளைஞன் கட்டுநாயக்க விமானநிலையத்தில் அதிரடி கைது…!!

Read Time:1 Minute, 36 Second

26-1445878831-30-arrest-600-300x225போலி ஆவணங்களைப் பயன்படுத்தி துருக்கி ஊடாக இத்தாலி செல்ல முற்பட்ட நபர் ஒருவரை கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று குறித்த நபரை கைது செய்துள்ளதாக விமானநிலைய குற்றப்புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த இளைஞன் நீர்கொழும்பு பிரதேசத்தில் உள்ள தரகர் ஒருவர் மூலமே குறித்த போலி ஆவணங்களை தயாரித்து இத்தாலி செல்ல முற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை நீர்கொழும்பு பிரதேசத்தில் உள்ள குறித்த தரகர் இரண்டு வாரங்களுக்குள்குறித்த போலி ஆவணங்களை தயார் செய்து கொடுத்துள்ளதோடு, இத்தாலி சென்ற பின்பு அங்கு வசிக்கும் நபர் ஒருவருக்கு 3இலட்ச பணத்தினை வழங்குமாறும் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த இளைஞன் 23 வயதானவர் என்றும் இவர் யாழ்ப்பாணம் பிரதேசத்தைச்சேர்ந்தவர் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேக நபர் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வட்டிக்கு பணம் பெற்றுக்கொடுத்த பெண் கத்திக்குத்துக்கு இலக்காகி பலி…!!
Next post பாடசாலை மாணவன் கிணற்றுள் இருந்து சடலமாக மீட்பு ; கொலையா? தற்கொலையா ?