மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இதுதானா?
பாணந்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் 80 வயதான முதியவரின் 5 பிள்ளைகளை எதிர்வரும் 25 ஆம் திகதி பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மேலதிக நீதவான் கல்ஹாலி லியனகே இன்று உத்தரவிட்டுள்ளார்.
முதியவரின் மகன் ஒருவர் கேகாலையில் கடந்த மாதம் 26 ஆம் திகதி முதியவரின் கையில் 500 ரூபா பணத்தை கொடுத்து பாணந்துறை செல்லும் பஸ்ஸில் ஏற்றி அனுப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாணந்துறையில் முதியவருக்கு சுகவீனம் ஏற்பட்டதன் காரணமாக பஸ்ஸில் பயணித்த சக பயணி ஒருவர் அவரை வைத்தியசாலையில் சேர்த்துள்ளார்.
தந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறித்து 5 பிள்ளைகளுக்கும் இரண்டு முறை அறிவித்தும் அவர்கள் வந்து அவரை பார்க்கவில்லை எனவும் முதியவரின் ஒரு மகன் பொலிஸில் சேவையாற்றுவதாகவும் பாணந்துறை பொலிஸார் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரின் இந்த முறைப்பாட்டை ஏற்றுக்கொண்ட நீதவான், முதியவரின் பிள்ளைகளான எம். ரத்னாவதி, இந்திராணி முனசிங்க, ஸ்ரீயானி முனசிங்க, காமினி முனசிங்க, தயாசிறி முனசிங்க ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளார்.
Average Rating