நாமக்கல் அருகே பிளஸ்–2 மாணவி கழுத்தை நெரித்து கொலை…!!

Read Time:2 Minute, 46 Second

201607151655449563_plus-two-girl-student-killed-near-namakkal_SECVPFநாமக்கல் மாவட்டம் வேலக்கவுண்டம்பட்டியை சேர்ந்தவர் செல்வம். அரசு பள்ளி ஆசிரியர். இவரது மனைவி சுமதி.அந்த பகுதியில் மெடிக்கல் வைத்து நடத்தி வருகிறார்.

இவர்களின் 2–வது மகள் காவியா (வயது 17). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார்.

கடந்த ஓராண்டுக்கு முன்பு மாணவி காவியா தனது தந்தை தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக புகார் கூறினார். இதையடுத்து அவரது தந்தையும், தாயும் பிரிந்து தனித்தனியாக அந்த பகுதியில் வசித்து வருகிறார்கள். இருவரின் டைவர்ஸ் தொடர்பான வழக்கும் நாமக்கல் கோர்ட்டில் நடந்து வருகிறது. இதைத்தொடர்ந்து காவியா தனது தாயுடனும், இன்னொரு மகள் செல்வத்துடனும் வசித்து வருகிறார்கள்.

இந்த டைவர்ஸ் வழக்கு தொடர்பான விசாரணை இன்று நாமக்கல் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதனால் கோர்ட்டில் ஆஜராவதற்காக காவியாவின் தந்தையும், தாயும் நாமக்கல் கோர்ட்டிற்கு இன்று காலை வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றனர். அப்போது காவியா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

இதற்கிடையே இன்று மதியம் உறவினர் ஒருவர் காவியா வீட்டிற்கு சென்றார். அப்போது அவர் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தினரிடம் கூறினார். தகவல் அறிந்த ஏராளமானோர் அங்கு திரண்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

தகவல் அறிந்த வேலகவுண்டம்பட்டி போலீசார் அங்கு விரைநது சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் பட்டப்பகலில் மர்ம நபர்கள் வீடு புகுந்து கழுத்தை நெரித்து மாணவியை கொன்று விட்டு தப்பியது தெரியவந்தது.

ஆனால் மாணவியை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை செய்தனர் என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நெற்குன்றத்தில் கணவரின் குடிப்பழக்கத்தில் மனைவி தற்கொலை…!!
Next post பாசமாக வளர்த்த நாயை கொன்றதால் கர்ப்பிணி பெண் தற்கொலை: மனமுடைந்த கணவனும் தூக்குப்போட்டு பலி…!!