வான் விபத்தில் ஒருவர் பலி! ஏழு பேர் படுகாயம்…!!
Read Time:1 Minute, 3 Second
கண்டி- கொழும்பு பிரதான வீதி கலிகமுவ பகுதியில் வான் ஒன்று பாதையை விட்டு விலகி விழுந்து விபத்துக்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வான் கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் நேற்றிரவு இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்களை கேகாலை வைத்தியசாலையில் அனுமதித்ததை அடுத்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அக்குரணை பகுதியை சேர்ந்த 19 வயதுடைய இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
Average Rating