காணாமல் போன சிறுவன் கிணற்றிலிருந்து சடலாமாக மீட்பு…!!

Read Time:1 Minute, 36 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90காணாமல் போயிருந்த 5 வயது சிறுவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட துயரச் சம்பவம் ஒன்று கிளிநொச்சி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி – வட்டக்கச்சி, புதுக்காடு பகுதியைச் சேர்ந்த காந்தரூபன் தர்ஷன் எனும் 5 வயது சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கடந்த 15 ஆம் திகதி காணாமல் போயிருந்த சிறுவனை தேடும் பணிகளில் பெற்றோர்கள் மற்றும் பொலிஸார் தொடர்ந்தும் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு 10.30 மணியளவில் பாதுகாப்பற்ற கிணறு ஒன்றில் சிறுவனின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து, சிறுவனின் சடலம் இன்று காலை திடீர் மரண விசாரணை அதிகாரி த. திருலோகமூர்த்தி முன்னிலையில் மீட்கப்பட்டு பிரேதபரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சிறுவனின் மரணம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உங்கள் இதயத்திற்கு உகந்த உணவுகள் எவை ?
Next post நாமல் ராஜபக்சவை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்…!!