கனரக வாகனத்துடன் மோதுண்டு கடைக்குள் புகுந்த வான்…!!
மாத்தறை – திக்வெல்ல பிரதேசத்தில் இடம் பெற்ற பாரிய வாகன விபத்தில் ஐவர் காயமடைந்துள்ளதாகவும், இதில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து நேற்று இரவு சுமார் 8.30 மணியளவில் இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கனரக வாகனம் ஒன்றும், வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதாலேயே குறித்த வாகன விபத்து இடம் பெற்றுள்ளது.
முன்னால் சென்ற கெப் ரக வாகன சாரதியின் தவறான விளக்கு சமிக்ஞையினால், அதற்கு பின்னால் பயணித்து வந்த வான் வேகக்கட்டுப்பாட்டை இழந்து கனரக வாகனத்துடன் மோதி, அருகில் இருந்த கடையொன்றுக்குள் புகுந்து விபத்துக்குள்ளானதாக அறியமுடிகின்றது.
விபத்துக்குள்ளான வாகனங்களில் பயணித்தவர்களும், குறித்த கடையில் இருந்தவர்களுமாக ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை திக்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating