ஐதராபாத்தில் 6 வயது மாணவன் அடித்துக்கொலை…!!
ஐதராபாத்தை சேர்ந்தவர் அப்துல் மஜித் கார் டிரைவர். இவரது மகன் இப்ராகிம் (வயது 6). இவன் ஐ.ஏ.எஸ். காலனியில் உள்ள பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான்.
கடந்த 12-ந்தேதி இப்ராகிமை 3-ம் வகுப்பு மாணவன் ஒருவன் தகராறில் பயங்கரமாக தாக்கினான். இதில் இப்ராகிமுக்கு இடுப்பு, வயிறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.
மாலையில் வீட்டுக்கு சென்ற இப்ராகிம் ஒரு மாணவன் தாக்கியதை பெற்றோரிடம் தெரிவித்தான். அவனை அருகில் இருந்த சிறிய மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர்.
ஆனால் மறுநாள் இப்ராகிம் வலியால் துடித்தான். உடனே மாணவனை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவனை பரிசோதித்த டாக்டர்கள், வயிறு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதை கண்டு பிடித்தனர்.
இதையடுத்து அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி மாணவன் பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.
Average Rating