6-வது மாடியில் இருந்து கீழே விழுந்து பெண் என்ஜினீயர் பலி…!!
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை சேர்ந்தவர் மாணிக்க வாசகம் இவரது மகள் கங்காதேவி (வயது 23).
என்ஜினீயரான இவர் கடந்த 2 ஆண்டுகளாக சரவணம்பட்டியை அடுத்த கீரணத்தம்பட்டி பகுதியில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
இதனால் அந்த நிறுவன வளாகத்திலேயே அடுக்கு மாடி குடியிருப்பில் 6–வது மாடியில் தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்தார்.
நேற்று மாலை கங்கா தேவி, மாடியில் நின்று பேசி கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது திடீரென கங்காதேவி மாடியில் இருந்து தவறி கீழே விழுந்ததாக தெரிகிறது. இதில் தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே கங்காதேவி பரிதாபமாக இறந்தார்.
இதை பார்த்து அந்த குடியிருப்பில் வசித்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுகுறித்து கோவில் பாளையம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து கங்காதேவி உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். கங்காதேவி உடல், பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
என்ஜினீயர்கங்காதேவி, செல்போன் பேசும் போது மாடியில் இருந்து தவறி விழுந்தாரா? அல்லது தற்கொலை செய்யும் எண்ணத்தில் மாடியில் இருந்து கீழே குதித்தாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்தனர்.
இதில் கங்காதேவியின் சாவு குறித்து போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் அவரது தோழி பிரிந்து சென்றதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்தது.
கங்காதேவிவுடன் , திருச்செங்கோட்டை சேர்ந்த ஒரு பெண் கல்லூரியில் ஒன்றாக படித்தார்.
கல்லூரி படிப்பை முடித்த கங்காதேவி, சரவணம் பட்டியில் வேலைக்கு சேர்ந்தார். ஆனால் அவரது தோழி, கோவையில் உள்ள கல்லூரியில் மேற்படிப்பு படித்தார்.
பின்னர் கடந்த 2 மாதங்களுக்கு கங்காதேவியின் தோழிக்கு சென்னையில் வேலை கிடைத்தது. இதனால் அவர் சென்னைக்கு சென்று விட்டார். இதையொட்டி சென்னையில் உள்ள தோழியிடம் அவர் அடிக்கடி பேசி வந்தார்.
அப்போது சென்னைக்கு சென்ற தோழியிடம் நீ கோவைக்கு வந்துவிடு என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே கங்கா தேவி, தோழி பிரிந்து சென்ற சோகத்தில் இருந்து வந்தார். இதனால் தான் அவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்.
இதுகுறித்து கங்கா தேவியின் குடியிருப்பில் தங்கியிருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே கங்கா தேவியின் தாய் செந்தில் குமாரி , போலீசில் அளித் துள்ள புகாரில், தனது மகள் மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்ததாக தெரிவித்துள்ளார்.
Average Rating