நாட்டில் இனவாதம் தலைதூக்க இடமளிக்க முடியாது! துமிந்த…!!

Read Time:1 Minute, 57 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90நாட்டில் மீளவும் இனவாதம் தலைதூக்குவதற்கு இடமளிக்க முடியாது என முன்னிலை சோசலிச கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையிலான மோதல் சம்பவம் நாட்டில் மீளவும் இனவாதம் தலைதூக்குதவற்கான காரணியாக அமைந்து விடக் கூடாது என அவர் சிங்கள பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

கடந்த மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறவில்லை என சிலர் கருத்து வெளியிடுகின்றனர்.

இவ்வாறான கருத்துக்கள் மூலம், ஒரு இனம் மற்றுமொரு இனத்திற்கு அடிமைப்பட்டிருக்க வேண்டுமென்ற நிலைப்பாடே வெளிப்படுகின்றது.

83ம் ஆண்டு ஜூலை மாதம் இடம்பெற்றதனைப் போன்று மீளவும் சிங்களத் தமிழ் கலவரம் இடம்பெற அனுமதிக்கப்பட முடியாது.

சிங்கள அல்லது தமிழ் இனவாதத்தை தூண்ட எவருக்கும் இடமளிக்க முடியாது.

முப்பது ஆண்டுகளாக போர் நீடித்து வந்த நாட்டில் இந்த சம்பவத்தை பயன்படுத்தி மீளவும் முரண்பாடுகளை வளர்க்க இடமளிக்கப்பட முடியாது.

பல்கலைக்கழக மாணவர்களும் அரசியல் கட்சிகளும் இந்தப் பிரச்சினையை இணக்கப்பாட்டின் அடிப்படையில் தீர்த்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கைப் பலத்தை நிரூபிக்க முயன்ற பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…!! வீடியோ
Next post யாழ் பல்கலைகழக மாணவர்கள் கவனத்திற்கு..!!