யாழ் பல்கலைகழக மாணவர்கள் கவனத்திற்கு..!!
தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் புதன்கிழமையில் இருந்து பகுதியளவில்ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார்.
இதன்கீழ் எதிர்வரும் புதன்கிழமையன்று 20ஆம் திகதி மருத்துவப்பீட மற்றும்சித்த மருத்துவப்பீட பயிற்சிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இதனை சமிஞ்சையாக வைத்துக்கொண்டு ஏனைய பீடங்களும் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தென்னிலங்கைக்கு சென்றுள்ள மாணவர்களுக்கும் பல்கலைக்கழகத்தில்இயல்பான நிலை ஏற்பட்டுள்ளது என்பதை காண்பிக்கவேண்டியுள்ளது.
இது குறிப்பாக விஞ்ஞானப்பீட பீடாதிபதிக்கும் பொறுப்பாகியுள்ளது. எனவே தென்னிலங்கை மாணவர்கள் தமது பெற்றோருடன் வந்து யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தமது கற்றல்நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியும் என்று துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.
Average Rating