இரும்பு விற்பனை நிலையத்தில் தீ…!!
Read Time:1 Minute, 15 Second
காலிப் பகுதியில் பழைய இரும்பு சேகரிப்பு மற்றும் விற்பனை நிலையமொன்றில் பாரிய தீ அனர்த்தம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
காலி நகரத்திற்கு சற்று தொலைவில் உள்ள நுகதுவ பிரதேசத்தில் இன்று காலை குறித்த தீ அனர்த்தம் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வர்த்த நிலையத்தில் ஊழியர்கள் பழைய இரும்பை வெட்டிக் கொண்டிருந்த நிலையில், அதிலிருந்து வெளிப்பட்ட தீப்பொறிகள் காரணமாகவே தீ அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
தீ விபத்தினை அடுத்து காலி தீயணைக்கும் படையினர் மற்றும் அப்பிரதேச கடற்படை முகாம் வீரர்கள் ஒன்றிணைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
எனினும் தீ அனர்த்தம் காரணமாக குறித்த வர்த்தக நிலையம் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. சேத விபரங்கள் இதுவரை தெரியவரவில்லை.
Average Rating