கோயிலுக்குச் சென்ற இளைஞன் பலி…!!
Read Time:51 Second
மட்டக்களப்பு, பன்குடாவெளிப் பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் கொம்மாதுறை பிரதேசத்தைச் சேர்ந்த கந்தசாமி ஜெயராஜ் (வயது 23) என்பவர் பலியாகியுள்ளார்.
இவர் வீட்டிலிருந்து இலுப்படிச்சேனையிலுள்ள கோயிலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது, வீதியில் கட்டாக்காலி மாடுகள் குறுக்கிட்டதன் காரணமாக விபத்து இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகின்றது.
இந்த விபத்து தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Average Rating