ஜப்பானால் இலங்கைக்கு பல மில்லியன் பெறுமதியான காவு வண்டி நன்கொடை…!!
Read Time:1 Minute, 8 Second
ஜப்பான் – இலங்கை நட்புறவு நிறுவனம், 35 மில்லியன் பெறுமதியான நோயாளர் காவு வண்டியை (ambulance) இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.
ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வைத்து நேற்றைய தினம் இந்த வண்டி வழங்கப்பட்டுள்ளது.
ஜப்பான் – இலங்கை நட்புறவு நிறுவனத்தின் உறுப்பினர் Toji Eiichi இந்த நன்கொடையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கியுள்ளார்.
இதன் போதே ஜனாதிபதி இந்த வண்டியை இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு வழங்கியுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் ஜப்பான் – இலங்கை நட்புறவு நிறுவனம் தலைவர் மற்றும் பலர் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Average Rating