வீடியோ: பீர் குடித்துக் கொண்டே சுண்டெலியை உயிருடன் சாப்பிடும் வாலிபர்..!!
பீர் குடித்துக் கொண்டே சுண்டெலியை உயிருடன் வாலிபர் சாப்பிடும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.
சமீபத்தில் சமூக வலை தளங்களில் ஒரு வினோதமான வீடியோ ஒளிபரப்பாகி விலங்கு நல ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதில் வாலிபர் ஒருவர் ஒரு கேனில் இருந்த பீர் குடிக்கிறார். அதற்கு ‘சைடிஷ்’ ஆக உயிருடன் இருக்கும் சுண்டெலியை குச்சியால் குத்தி பிடித்தபடி கடித்து சாப்பிட்டார்.
அதன் பிறகு அடுத்த சுண்டெலியை எடுத்து கடித்து சாப்பிடும் முன்பு சோயா மொச்சை குழம்பை ருசிக்கிறார். அப்போது அவரிடம் சிக்கிய சுண்டெலி உயிர் தப்ப ‘கீச் கீச் என ஒலி எழுப்புகிறது. அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத அந்த வாலிபர் குடிபோதையில் சுண்டெலியை கடித்து சாப்பிட்டு ருசித்தபடியே பீர் அருந்துகிறார்.
இந்த வீடியோ சீனாவில் பதிவு செய்யப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. இதற்கு விலங்கு நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து சிறிது நேரத்தில் அந்த வீடியோ தடை செய்யப்பட்டது.
இந்த வீடியோ உங்கள் பார்வைக்காக,
Average Rating