கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு புதிய ஓடுதளம்…!!
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மற்றுமொரு விமான ஓடுதளத்தை நிர்மாணிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் பிரதியமைச்சர் அசேகா அபேசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு நாராஹேன்பிட்டியில் உள்ள இலங்கை போக்குவரத்துச் சபையின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தற்போதுள்ள ஓடுதளத்தில் இருந்து 2 ஆயிரம் மீற்றர் தொலைவில் இந்த இரண்டாவது ஓடுத்தளத்தை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஓடுதளத்தை நிர்மாணிக்க தேவையான காணி தொடர்பில் தற்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் தற்போதுள்ள விமான ஓடுதளத்தை நவீனமயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனால், சிறிது காலத்திற்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை மூட நேரிடும் எனவும் பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Average Rating