ஒரே குடுபம்பத்தை சேர்ந்த இரண்டு சகோதரர்களுக்கு மரண தண்டனை…!!
கொலை சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ள ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு சகோதரர்களுக்கு மாத்தறை மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
மேல் நீதிமன்ற நீதிபதி தமித் கொடவத்தை இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
2006 ஆம் ஆண்டு ஒக்டோபர் 9 ஆம் திகதி அக்குரஸ்ஸ வில்பிட பிரதேசத்தில் 50 வயதான நபரை தாக்கி கொலை செய்ததாக இவர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக இரு சகோதரர்களுக்கு எதிராக மாத்தறை மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்ததுடன் நீண்டகாலமாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
வழக்கு விசாரணை முடிந்து இன்று தீர்ப்பை அறிவித்த நீதிபதி குற்றவாளிகளான சகோதரர்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
அக்குரஸ்ஸ வில்பிட பிரதேசத்தை சேர்ந்த 35 மற்றும் 33 வயதான சகோதரர்களுக்கு இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Average Rating