நூதன முறையில் பணம் சம்பாதித்த ரிக்ஷாகாரர்… காண்பவர்களை வாயடைக்க வைத்த காட்சி…!! வீடியோ
டெல்லியில் சில நாட்களாக பெய்த கனமழையால் அங்குள்ள தெருக்களில் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சி அளித்தது. இதனால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் டெல்லியில் உள்ள முந்த்கா மெட்ரோ ரெயில் நிலைய பகுதிகளில் ஒரு ரிக்ஷாகாரர் செய்த செயல் வியக்க வைத்துள்ளது.
முந்த்கா மெட்ரோ ரெயில் நிலைய பகுதி ஒட்டியுள்ள குறுகிய தெருவில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி இருந்தது. அந்த தண்ணீர் மிகவும் அசுத்தமாக காணப்பட்டது. அந்த தண்ணீரில் கால் வைக்க சிலர் பிளாட் பாரத்திலே நின்று கொண்டிருந்தனர்.
இதனை கண்ட ரிக்ஷா காரர் அந்த பிளாட் பாரத்திற்கு கொண்டு போய் விடுவதற்கு தலா ரூ5 வசூலித்து உள்ளார். அதனையும் கொடுத்து சிலர் சென்றனர். சிலர் கால் தண்ணீரில் பட்டால் கூட பராவியில்லை என்று நடந்து சென்றனர். ரிக்ஷா காரரின் இந்த செயல் அங்கு இருந்தவர்களை வியக்க வைத்ததுடன், சிலரை புலம்பவும் வைத்தது.
Average Rating