லெபனானின் கானா உயிரிழப்பு 28 மட்டுமே
Read Time:1 Minute, 10 Second
லெபனானின் கானா கிராமம் மீது இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில் 28 பேர் மட்டுமே உயிரிழந்ததாக மருத்துவமனையின் திருத்தப்பட்ட தகவல் கூறுகிறது. தெற்கு லெபனானில் டையர் நகருக்கு அருகேயுள்ள கானா கிராமத்தின் மீது கடந்த ஜூலை 30-ம் தேதி இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 22 குழந்தைகள் உள்பட 52 பேர் உயிரிழந்ததாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவித்தன.
ஆனால் பதிவேட்டின் அடிப்படையில் அந்தக் கட்டடத்தின் தரை தளத்தில் தங்கியிருந்தோர் எண்ணிக்கை கணக்கிடப்பட்டதாக டையர் அரசு மருத்துவமனை வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன.
திருத்தப்பட்ட தகவலின் அடிப்படையில் 16 குழந்தைகள் உள்பட 28 பேர் உயிரிழந்ததாகவும் 9 பேர் காயமடைந்ததாகவும் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.