ஒரே குடும்பத்தை சேர்ந்த அப்பா மகன் பலி…!!
அம்பாறை, பொத்துவில் பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பலியானதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விபத்தானது அம்பாறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஏத்தம் குஞ்சான் ஓடைப்பாலத்தின் அருகில் நேற்று இரவு 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் தெரிய வருவதாவது,
திருக்கோவில் பிரதேசத்தை சேர்ந்த குடும்பமொன்று மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளது. குறித்த சைக்கிளானது வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திர பெட்டியுடன் மோதியதாலேயே விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில், ஜெயந்திரன் (35), மகன் கஜேய் (08) ஆகியோர் பலியாகியுள்ளதாகவும், அதேவேளை, மனைவியான கிருஸ்ணகலா (28) மகள் கஜானி (03) ஆகியோர் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
படுகாயமடைந்த இருவரும் அம்பாறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
Average Rating