புறக்கோட்டையில் பற்றி எரியும் வர்த்தக நிலையம் – பாரிய தீ விபத்து…!!

Read Time:1 Minute, 20 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90கொழும்பு – புறக்கோட்டை ஒல்கொட் மாவத்தையில் உள்ள வர்த்தக நிலயம் ஒன்றில் திடீரென பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

கொழும்பு ரயில் நிலையத்திற்கு முன்பாக உள்ள வர்த்த நிலையத்தில் இன்று ஏற்பட்ட தீயினால் அந்த பகுதி முழுவதும் புகைமண்டலமாக காணப்படுகின்றது.

இந்த இடத்தில் 5 இற்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளதோடு, தீயணைப்புப் பிரிவினர் குறித்த தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு பாரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதனால் கொழும்பு கோட்டை பகுதியில் பாரிய வாகன நெரிசல் காணப்படுவதோடு, சில இடங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த தீ விபத்தினால் உயிராபத்துக்கள் மற்றும் பொருட்சேதங்கள் தொடர்பில் இதுவரை எந்தத் தகவல்களும் அறிவிக்கப்படவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொளு கொளு குழந்தையை பராமரிக்க வேண்டுமா? இதோ உங்களுக்கு இந்த டிப்ஸ்…!!
Next post அதிக வேகத்தால் வந்த விபரீதம் – இளைஞன் பலி…!!