சங்குப்பிட்டியில் விபத்து! இருவர் பலி…!!
கிளிநொச்சி பூநகரி சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற மோட்டார் உந்துருளி விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர்.
நேற்று இரவு இடம்பெற்ற இவ்விபத்தில் யாழ்ப்பாணம் திருநெல்வேலி மாரியம்மன் வீதியைச் சேர்ந்த கதிரவேலு கபிராஜ்(26) என்ற ஒரு பிள்ளையின் தந்தையும் மாவத்தகமவை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் பீசீ கரம்பொல என்பவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் இருவரும் பலத்த காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் இறந்துள்ளனர். இறந்த பொலிஸாரது சடலம், கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை திருநெல்வேலி மாரியம்மன் வீதியைச் சேர்ந்த 26 வயதுடைய கதிரவேலு கபிராஜ் என்பவரை விபத்து நடைபெற்ற இரவு 1.30 மணியளவில் காணவில்லை என்று தேடியபோது விபத்து இடம்பெற்ற இடத்தில் சங்குபிட்டி கடல் நீரினுள் சடலம் இருப்பதை கண்டு இன்று காலை கிளிநொச்சி மாவட்ட நீதவான் ஏ.ஏ. ஆனந்தராஜ் அவர்கள் பார்வையிட்ட பின்னர் கடலில் இருந்து சடலம் எடுக்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் கொலையா? அல்லது விபத்தா? என்பது தொடர்பில் பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருவதாக பூநகரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Average Rating