விபத்தில் அண்ணனும் தங்கையும் படுகாயம் : சாரதி கைது…!!

Read Time:1 Minute, 32 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90 (4)திருகோணமலை, தம்பலகாமம் பொற்கேணி பகுதியில், முச்சக்கரவண்டியொன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த அண்ணனும் தங்கையும், திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றிரவு வியாழக்கிழமை (21) இடம்பெற்ற இவ்விபத்தில், முள்ளிப்பொத்தானை 09ஆம் வாய்க்கால் பகுதியைச் சேர்ந்த டி.கிதுஷன் (22 வயது) மற்றும் அவரது தங்கை யானடி சஜிந்தனி(17 வயது) ஆகியோரே படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வேகமாக வந்து கொண்டிருந்த முச்சக்கரவண்டி, கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளுடன் மோதியதனாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட முச்சக்கரவண்டியின் சாரதியை, திருகோணமலை நீதிமன்றத்தில்இன்று வெள்ளிக்கிழமை(22) ஆஜர்படுத்தவுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், விபத்துதொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை…!!
Next post டீசல் வண்டி குடைசாய்ந்ததில் சாரதி படுகாயம்…!!