டீசல் வண்டி குடைசாய்ந்ததில் சாரதி படுகாயம்…!!
Read Time:54 Second
கொழும்பு – பதுளை பிரதான வீதி ஹப்புத்தளை பகுதியில் டீசல் கொண்டு சென்ற பௌசர் வண்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து பண்டாரவளை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் இன்று இடம்பெற்றுள்ளதாகவும், இந்த வாகனத்தில் இருந்து டீசலை அகற்றும் நடவடிக்கைகளை பொலிஸார் மற்றும் விமானப்படையினர் முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த விபத்தில் காயமடைந்த பௌசர் வண்டியின் சாரதி தியதலாவ ஆரம்ப மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Average Rating