செங்குன்றம் அருகே டிரைவரை தாக்கி ரூ.30 ஆயிரம் பறிப்பு: 3 வாலிபர்கள் கைது…!!

Read Time:1 Minute, 41 Second

201607221418296238_Driver-attack-money-theft-3-youths-arrest-near-redhills_SECVPFமாதவரத்தில் இருந்து ஆந்திராவுக்கு நேற்று இரவு ரசாயன பவுடர் ஏற்றிய லாரி சென்று கொண்டு இருந்தது. ஆந்திராவை சேர்ந்த டிரைவர் லியாஸ்கான் ஓட்டினார்.

செங்குன்றத்தை அடுத்த எடப்பாளையம் அருகே நள்ளிரவு சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் லாரியை வழிமறித்தனர்.

அவர்கள் லாரி டிரைவர் லியாஸ்கானை அரிவாளை காட்டி மிரட்டி சரமாரியாக தாக்கினர். பின்னர் அவரிடம் இருந்த ரூ.30 ஆயிரத்தை பறித்து தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து சோழவரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பலத்த காயம் அடைந்த லியாஸ் கானுக்கு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த நிலையில் டிரைவரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட எடப்பாளையத்தை சேர்ந்த சாயின்சா, மதன், மற்றும் செங்குன்றத்தை அடுத்த அம்பேத்கார் நகரை சேர்ந்த சக்திவேல் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து ரூ.30 ஆயிரம், பட்டா கத்திகள், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடிகர் விஜயை போலவே தோற்றமளிக்கும் அவரது ரசிகை – வைரலாக பரவும் வீடியோ..!!
Next post திருமணமான 30 நாளில் கணவனை, காதலனை ஏவி கொலை செய்த நர்ஸை ரெயில்வே போலீசார் கைது செய்தனர்…!!