சுவரில் ஏறமுடியாத ஆண் காவலரை தூக்கிவிட்ட பெண் சப்-இன்ஸ்பெக்டர்…!!
இந்தியாவில் மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் சட்டவிரோதமாக மண்ணெண்ணெய் பதுக்கி வைத்திருப்பதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சோதனை நடத்த உத்தரவிடப்பட்டது.
இதனையடுத்து மாவட்ட எஸ்.பி. ரித்திகா பகத் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். குடோனின் நுழைவு வாயில்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தது. சுற்றிலும் உயர்ந்த மதில் சுவர் இருந்தது. உடனடியாக ரித்திகா சுவரின் மீது ஏறினார்.
அப்போது அவருடன் சென்ற ஆண் காவலரால் சுவரின் மீது ஏறவே முடியவில்லை. அவரும் பலமுறை முயற்சி செய்து பார்த்து உள்ளார், ஆனால் அவரால் சுவரின் மீது ஏற முடியவில்லை. இதனையடுத்து சுவரின் மீது ஏறி சில தூரம் சென்ற ரித்திகா ஆண் காவலர் ஏற முடியாமல் கஷ்டப்படுவதை பார்த்து திரும்பி வந்து கைக்கொடுத்து உதவி செய்தார்.
பின்னர் அவர்கள் குடோனில் சோதனை நடத்தினர். அப்போது போலீசார் சுமார் 70 ஆயிரல் லிட்டர் மண்ணெண்ணெயை பறிமுதல் செய்தனர். அதனுடைய மதிப்பு ரூ. 50 லட்சம்.
Average Rating