2 மூக்கு, 2 வாய்–2 நாக்குடன் பிறந்த அதிசய எருமை கன்றுக்குட்டி…!!
சத்தியமங்கலம் அருகே உள்ள அரசூர் கள்ளுக்கடை வீதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் எருமை மாடு வளர்ந்து வருகிறார். சினையாக இருந்த இந்த எருமை மாடு ஆண் கன்றுக்குட்டியை ஈன்றது. அந்த கன்றுக்குட்டியின் தலை சற்று பெரியதாகவும், 2 மூக்குகளும், 2 வாய்களும், 2 நாக்குகளும் இருந்தது.
இதுகுறித்து பழனிச்சாமியின் மகன் சிவராஜ் கூறும்போது, ‘2 மூக்குகள், 2 வாய்கள், 2 நாக்குகளுடன் பிறந்த இந்த கன்றுக்குட்டிக்கு நேர்பார்வை தெரியவில்லை. பக்கவாட்டில் சென்று எங்கேயாவது மோதிக்கொள்கிறது. தாய் எருமை கன்றுக்குட்டிக்கு பால் கொடுக்க கத்திக்கொண்டே இருக்கிறது. ஆனால் கன்றுக்குட்டி பால் குடிக்க மறுக்கிறது. என்னுடைய தாய் பொன்மணி தான் கன்றுக்குட்டியை பராமரித்து வருகிறார்’ என்றார்.
இதுகுறித்து கால்நடை டாக்டர் வடிவேலு கூறும்போது ‘அதிசய பிறப்பான இந்த கன்றுக்குட்டி தாயின் மடியில் பால் குடிக்க வாய்ப்பில்லை. எனவே கன்றுக்குட்டிக்கு புட்டி பால் கொடுக்க வேண்டும். மேலும் கன்றுக்குட்டியால் தலையையும் தூக்க முடியவில்லை.’ என்றார். அதன்படி கன்றுக்குட்டிக்கு புட்டி பால் கொடுக்கப்பட்டது. இந்த அதிசய கன்றுக்குட்டியை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
Average Rating