பெண் குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு…!!
நாட்டில் தற்போதுள்ள மொத்த குற்றவாளிகளின் எண்ணிக்கை 43 ஆயிரத்து 929 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதாக புலனாய்வு பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இந்த வருடத்தின் ஜூன் 30 வரையான பகுதியிலேயே குற்றவாளிகளின் எண்ணிக்கை 43 ஆயிரத்து 929 ஆக பதிவாகியுள்ளது. அவற்றில் 973 பெண்களும் அடங்குவதாக கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 3 இலட்சத்து 50 ஆயிரம் குற்றவாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 22 ஆயிரத்து 937 பெண்கள் உள்ளடங்குவதாக குற்றப் புலனாய்வு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
70 வயதிற்கு மேற்பட்டோரின் பெயர்களை குற்றவாளி பட்டியலில் இருந்து நீக்கி விடுவதாகவும், அத்துடன் 20 ஆண்டுகள் நன்நடத்தையுடன் காணப்படும் குற்றவாளிகளின் பெயரும் பொலிஸ் அதிகாரிகள், அரச அதிகாரிகள் மற்றும் பொலிஸ் நிலையங்களின் மூலம் இந்த பட்டியலில் இருந்து நீக்கப்படுவர் எனவும் கூறப்பட்டுள்ளது.
Average Rating