ஈராக்: தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் பலி…!!

Read Time:1 Minute, 18 Second

201607241444101055_Suicide-bomber-kills-at-least-12-in-north-Baghdad_SECVPFஈராக்கின் தலைநகரான பாக்தாத் நகரின் வடக்கு பகுதியில் இன்று தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.

வடக்கு பகுதியில் ஒரு நுழைவு வாயிலில் இன்று தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர். சியட்டி மாவட்டத்தில் உள்ள கதிமியாவில் ஒரு நுழைவாயிலில் இன்று காலை ஒரு தீவிரவாதி தன் உடலில் கட்டிக்கொண்டு வந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளான். இதில், 8 ராணுவ வீரர்கள், 2 காவலர்கள் உள்பட 12 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

எந்த தீவிரவாத அமைப்புகளும் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை. எனினும், ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு இந்த தாக்குதலுக்கு காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முந்திரி பருப்பு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…!!
Next post அமெரிக்காவில் ஆளில்லா விமானம் மூலம் சாண்ட்விச்-காபி டெலிவரி…!!