நால்வர் பலி, தப்பிப் பிழைத்த சிறுவன்..!!
வரக்காபொல மற்றும் மன்குலம் பிரதேசப்பகுதிகளில் நேற்று இடம் பெற்ற இரு வெவ்வேறு விபத்தில் நால்வர் பலியானதுடன், நால்வர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அல்காமவில் இருந்து கரவிட்ட நோக்கி பயணித்த கார் ஒன்று லொறி ஒன்றுடன் மோதிய விபத்தில் இருவர் பலியாகியுள்ளதுடன் மூவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
விபத்து தொடர்பில் குறித்த லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, யாழ்ப்பாணம் – வவுனியா வீதியில் பஸ் ஒன்று மோட்டார் வாகனத்தின் மீது மோதியதில் இருவர் உயிரிழந்ததுடன், 4 வயது சிறுவன் காயங்களுக்கு மத்தியில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த விபத்தில் காயமடைந்த 24 வயது ஆண் ஒருவரும், 22 வயது பெண் ஒருவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து காரணமாக பஸ் சாரதியை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Average Rating