போக்குவரத்து பிரச்சினைகளால் திணறும் கொழும்பு..!!
Read Time:58 Second
கொழும்பு கோட்டை பகுதியில் உள்ள லோட்டஸ் வீதிக்கருகில் இடம்பெறும் ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தை ஓய்வூதியம் பெற்ற இராணுவ வீரர்களே முன்னெடுத்துள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, குறித்த பகுதியில் பயணிக்கும் வாகனங்களை மாற்று வழியில் செல்லுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தினமும் இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் காரணமாக சாதாரண மக்கள், சாரதிகள், பாடசாலை மாணவர்கள் என அனைவரும் பல இன்னல்களுக்கு முகம் கொடுக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Average Rating