நாளாந்த செலவுக்காக எல்ல பகுதியில் பிச்சையெடுத்த பிரித்தானிய யுவதி..!!
Read Time:1 Minute, 16 Second
பதுளை எல்ல பகுதியில் வயலின் வாசித்து பிச்சை எடுத்துவந்த பிரித்தானிய யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டார்.
24வயதான இந்த யுவதி, ஒக்ஸ்போட், சமர்டவுன் பகுதியை சேர்ந்தவர்.
கடந்த 8ஆம் திகதியன்று இலங்கை வந்த இவர், ஒரு மாதம் இலங்கையில் தங்கியிருக்கிறார்.
இந்தநிலையில் ராவணா எல்ல பகுதியில் பாதையோரத்தில் அமர்ந்து வயலின் வாசித்து பணம் திரட்டிபோது எல்ல காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
விசாரணைகளின்போது தமது நாளாந்த செலவுகளுக்கு பணம் தேவைப்பட்டதன் காரணமாக பிச்சையெடுக்க நேரிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் இலங்கையில் 1948, 20ஆம் இலக்க குடிவரவு சட்டத்தின்படி வெளிநாட்டவர் பிச்சையெடுப்பது தடைசெய்யப்பட்டுள்ளது என்ற அடிப்படையில் குறித்த பெண் எச்சரித்து விடுதலை செய்யப்பட்டார்.
Average Rating