டெல்லியில் கடத்தி 2 முறை கற்பழிக்கப்பட்ட 14 வயது சிறுமி பலி…!!
டெல்லியில் கடத்தி கற்பழிக்கப்பட்ட 14 வயது சிறுமி இறந்தாள்.
வடக்கு டெல்லியில் புராரி பகுதியை சேர்ந்த காவலாளியின் 14 வயது மகள் வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தாள். அப்போது அவளை சிலர் கடத்தி சென்று கற்பழித்தனர்.
அதே போன்று மற்றொரு தடவையும் கடத்தி சென்று துன்புறுத்தி கற்பழித்தனர். இச்சம்பவம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்தது.
இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. ஆனால் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. எனவே டெல்லி பெண்கள் கமிஷன் இப்பிரச்சனையில் இறங்கி தீவிர நடவடிக்கை மேற்கொண்டது.
அதை தொடர்ந்து கற்பழிக்கப்பட்ட சிறுமிக்கு மாஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி சிறுமி பரிதாபமாக இறந்தாள்.
உடலில் உள் காயங்கள் அதிக அளவில் இருந்ததால் அவள் இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே அவளது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதன் அறிக்கை கிடைத்த பிறகு மேல் நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் கற்பழிப்பு வழக்கில் குற்றவாளி ஒருவரை போலீசார் கைது செய்தனர். சிறுமியை கடத்தி கற்பழித்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே கற்பழிப்பு வழக்கில் உரிய விசாரணை மேற்கொள்ளவில்லை என டெல்லி பெண்கள் கமிஷன் போலீசாருக்கு நோட்டீசு அனுப்பியுள்ளது.
Average Rating