ஓடும் பஸ்சில் 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ் எஸ்.ஐ. கைது..!!
அரியானா மாநிலத்தில் உள்ள கர்னால் மாவட்டம், நசிர்பூர் கிராமத்தை சேர்ந்த ஒரு நடுத்தர வயது பெண் நேற்று முன்தினம் மாலை ஜிண்ட் நகரில் இருந்து கர்னல் செல்வதற்காக பஸ்சில் ஏறினார். அந்த பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால் தனது ஆறு வயது மகளை ராம்பால் என்பவருக்கு அருகாமையில் காலியாக இருந்த இருக்கையில் அமர வைத்தார்.
அரியானா போலீஸ் துறையில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிவரும் ராம்பால், இருட்ட தொடங்கியதும் தனது அருகில் அமர்ந்திருந்த சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்த தொடங்கினார். இதைகண்ட சிறுமியின் தாயார் கூச்சலிடவே, பஸ்சில் வந்த சகப்பயணிகள் குடிபோதையில் இருந்த ராம்பாலை பிடித்து, தர்மஅடி போட்டு, போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
ராம்பால் மீது சிறார் பாலியல் வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள ரோஷ்னி தேவி மகளிர் காவல் நிலைய போலீசார், பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கும், சிகிச்சைக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.
Average Rating