காளஹஸ்தி அருகே எந்திரத்தில் தலைமுடி சிக்கி இளம்பெண் பலி..!!

Read Time:1 Minute, 46 Second

201607251006565709_young-woman-killed-machine-hair-stuck-near-Kalahasthi_SECVPFகாளஹஸ்தி அடுத்த மத்திலேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கரய்யா, விவசாயி. இவருடைய மகள் சுஜாதா (வயது 24).

தந்தைக்கு உதவியாக விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். சுஜாதா நேற்று காலை நிலத்தில் வேர்க்கடலை அறுவடை பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். செடி, வேர்க்கடலை காய் ஆகியவற்றை தனித்தனியாக பிரித்தெடுக்க எந்திரம் வரவழைக்கப்பட்டது. அந்த எந்திரம் நிலத்துக்கு வந்ததும், காய்கள் நிறைந்த வேர்க்கடலைச் செடியை கொத்துக் கொத்தாக அள்ளி எந்திரத்தில் போட்டுக் கொண்டிருந்தார்.

அவர், எந்திரத்தின் அருகில் நின்று குனிந்து குனிந்து வேலை செய்து கொண்டிருந்தபோது, அவரின் தலைமுடி எந்திரத்தில் திடீரென சிக்கியது.

அவருக்கு தலை, கழுத்து ஆகிய பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தப்போக்கு அதிகமாகியது. அவரை, குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீகாளஹஸ்தி அரசு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், சுஜாதா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து ஸ்ரீகாளஹஸ்தி புறநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதர்சன் பிரசாத் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஓடும் பஸ்சில் 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ் எஸ்.ஐ. கைது..!!
Next post மிட்டியாகொடயில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை…!!