மஹிந்த அணியினருக்கு மைத்திரி விடுத்த எச்சரிக்கை…!!

Read Time:1 Minute, 46 Second

625.590.560.350.160.300.053.800.944.160.90ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்காலச் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்காத பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து கட்சியின் அமைப்பாளர் பதவிகள் பறிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆதரவு அணியில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று மாலை ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்

இந்த சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்னர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மறுசீரமைக்கப்படும்.

கட்சியின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்காதவர்களுக்கு பதிலாக புதிய அமைப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.

புதிய கட்சியை உருவாக்கி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உடைக்கும் சதித்திட்டங்களுக்கு யாரும் துணைபோகக் கூடாது என ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடலில் தேங்கியுள்ள அதிக கொழுப்பை கரைத்து, உடல் பருமனை குறைக்க உதவும் மீன் எண்ணெய்…!!
Next post மரணதண்டனையும் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்ட இரு குற்றவாளிகள்…!!