விதிகளை மீறியதால் தனக்குத்தானே அபராதம் விதித்த போலீஸ்காரர்..!!
நார்வே நாட்டில் மக்கள் சட்ட விதிகளை கடைபிடிப்பதில் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். யாருக்கும் ஏமாற்றும் எண்ணம் இருப்பதில்லை.
அந்த நாட்டில் போலீஸ்காரர் ஒருவர் விதி முறைகளை மீறியதால் தனக்குத்தானே அபராதம் விதித்துக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
அந்த போலீஸ்காரரின் பெயர் ஆர்னேஸ்டேவன். இவர், ரோந்து படகு கண்காணிப்பு போலீஸ்காரராக உள்ளார்.
இந்த படகில் செல்பவர்கள் கண்டிப்பாக கவச உடை அணிந்திருக்க வேண்டும் என்பது விதியாகும்.
ஆனால், அவர் படகில் சென்ற போது கவச உடை எடுத்து செல்ல மறந்து விட்டார்.
கவச உடை அணியாவிட்டால் அதற்கு சட்டப்படி அபராதம் வழங்க வேண்டும்.
எனவே, அவர் தனக்குத்தானே அபராதம் விதித்துக்கொண்டார். மொத்தம் ரூ.3,600 அபராதம் விதித்து உடனடியாக அவர் அந்த பணத்தை கட்டினார்.
இதுபற்றி இணைய தளங்களிலும் தகவல் வெளியானது. அந்த போலீஸ்காரரை பலரும் பாராட்டி உள்ளனர்.
நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating