நிஜ வாழ்வில் நடந்த டைட்டானிக் சம்பவம்… நெஞ்சை நெகிழ வைக்கும் காதல்…!! வீடியோ
சீனாவில் பெய்து வரும் கனமழையின் காரணமாக ஹூனன் மாகாணம் மற்றும் தலைநகர் பெய்ஜிங் கடுமையாக சேதமடைந்துள்ளது.
இதுவரை இந்த மழையின் காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தால், 164 பேர் உயிரிழந்துள்ளனர், 125 பேரை காணவில்லை மற்றும் நூற்றுக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
மீட்பு படையினரும் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், Jingmen நகரில், கணவர் ஒருவர் தனது மனைவியின் உயிரை காப்பாற்றி விட்டு, அவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ள சம்பவம் அந்நாட்டு மக்கள் மத்தியில் பூரிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடுமையான வெள்ளத்தில் 72 வயது பெண்ணும், அவரது கணவரும் தத்தளித்துள்ளனர், இந்நிலையில் கணவர் தனது மனைவியை காப்பாற்றுவதற்காக, மரத்தினை பிடித்துக்கொள்ளுமாறு மனைவியிடம் கூறியுள்ளார்.
ஆனால், வெள்ளத்தின் மிகுதியால் ஏற்பட்ட குளிரில் மனைவி உறைந்துபோய்விடுவாளே என்று கருதிய கணவர், மனைவி அணிந்திருந்த துணியை வைத்து அவரை மரத்தோடு சேர்த்து கட்டிவைத்துவிட்டுள்ளார், ஆனால் டைட்டானிக் படம் போன்று மனைவிக்கு உதவிய கணவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளார்.
மரத்தினை பிடித்தபடியே தொங்கிகொண்டிருந்த மனைவியை சிறிது நேரத்திற்கு பிறகு அங்கு வந்த மீட்பு படையினர் மீட்டுள்ளனர், தற்போது இந்த வீடியோ சீனாவில் வைரலாகியத்தைத் தொடர்ந்து, இதனைப் பார்த்து பலரும், என்ன ஒரு அருமையான காதல், மிகவும் நேசிக்கத்தக்க ஒன்று என கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
Average Rating