காணாமல் போனோர் தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம்…!!
காணாமல் போனோர் தொடர்பான இறுதி அறிக்கை எதிர்வரும் சில நாட்களில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளதாக விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த விசாரணைகளை முன்னெடுத்த விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம இது தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்றிட்கு கருத்து தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த விசாரணை ஆணைக்குழுவின் கால எல்லை இந்த மாதம் 15ஆம் திகதியுடன் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் காணாமல் போனோர் தொடர்பிலான இறுதி அறிக்கை தயாரிப்பானது முடிவடைந்துள்ளதாகவும், இது மிக விரைவில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating