புறக்கோட்டையில் கேரள கஞ்சா வைத்திருந்த வயோதிபர் கைது..!!
புறக்கோட்டை பகுதியில் கேரள கஞ்சா வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவனளப்பின் போதே குறித்த சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் வவுனியா பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதானவரென பொலிஸார் தெவித்தனர்.
குறித்த சந்தேகநபரிடமிருந்து 3 கிலோ 180 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட நபர் வவுனியாவிலிருந்து மவுன்ட் லாவன்யா பகுதிக்கு குறித்த கேரள கஞ்சாவினை கடத்த முற்பட்டமை ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதேவேளை சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதுடன், அவரை கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating