செஞ்சிக்கோட்டையில் கற்பழித்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் சுடிதார் சிக்கியது: போலீசார் விசாரணை…!!

Read Time:5 Minute, 32 Second

201607271456343347_Churidars-found-his-molested-and-murdered-women-Police_SECVPFவிழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கோட்டையில் கல்யாண மஹாலுக்கு பின்புறம் மலைப் பகுதியில் கடந்த 23-ந் தேதி 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். அவரது கை, கால்கள் கட்டப்பட்டிருந்தன. அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதப்பட்டது.

பெண் பிணமாக கிடந்த இடத்தில் தடயவியல் நிபுணர் சண்முகம் மற்றும் போலீசார் ஆய்வு செய்தனர். அந்த பகுதியில் கிடந்த ஒரு ஜோடி செருப்பு, கவரிங் செயின் மற்றும் பெண்ணின் உள்ளாடை ஆகியவற்றை கைப்பற்றினர்.

விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நரேந்திரன் நாயர் செஞ்சிக்கோட்டைக்கு வந்தார். இளம்பெண் பிணமாக கிடந்த இடத்தை பார்வையிட்டார். துப்பு துலக்க இன்ஸ்பெக்டர்கள் பூபதி, ஜோசப் செல்வராஜ் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் மேற்பார்வையில் தனிப்படை போலீசார் செஞ்சிக்கோட்டை பகுதியில் நேற்று விசாரணையை தொடங்கினர்.

கோட்டையின் உட்பகுதியில் தடயங்கள் ஏதும் கிடைக்கிறதா என்று பார்வையிட்டனர். பின்னர் கோட்டைக்கு வெளியே உள்ள மலைப்பகுதிக்கு சென்றனர்.

இளம்பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தில் இருந்து 50 மீட்டர் தூரத்தில் நீலநிற சுடிதார் கிடந்தது. அதை போலீசார் கைப்பற்றினர். அது அந்த பெண் அணிந்திருந்த சுடிதாராக இருக்கலாம் என்று போலீசார் கருதினர். இதையடுத்து கடலூரில் இருந்து மோப்ப நாய் குருநோவும், விழுப்புரத்திலிருந்து மோப்ப நாய் ராம்கியும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது. இளம்பெண் இறந்த இடத்தில் இருந்து 50 அடி தூரம் ஓடியது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

செஞ்சிக்கோட்டையில் பிணமாக கிடந்த பெண் யார்? அவரை கொன்ற கொலையாளிகள் யார் என்று இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

இதையொட்டி இன்ஸ்பெக்டர் ஜோசப் செல்வராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார் புதுவை மற்றும் கடலூர் பகுதிக்கு விரைந்து உள்ளனர். அதேபோல் இன்ஸ்பெக்டர் பூபதி தலைமையில் உள்ள தனிப்படையினர் விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய பகுதிகளுக்கு சென்றுள்ளனர்.

அந்த பகுதிகளில் காணாமல் போன பெண்களின் பட்டியலை சேகரித்து நேரடியாக அந்த பெண்களின் வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். விரைவில் இந்த கொலையில் துப்பு துலங்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.

செஞ்சிக்கோட்டைக்கு விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். கோடை விடுமுறை நாட்களில் கூட்டம் நிரம்பி வழியும்.

செஞ்சிக்கோட்டைக்கு ஏராளமான காதல் ஜோடிகளும் வந்து செல்கின்றனர். அவர்களை மிரட்டி மர்ம கும்பல் பணம் மற்றும் நகைகளை பறித்து செல்லும் சம்பவம் நடைபெற்று வருகிறது.

இந்த சூழ்நிலையில் செஞ்சிக்கோட்டை பகுதியில் இளம்பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் சுற்றுலாபயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் செஞ்சிக்கோட்டையில் கண்காணிப்பு கேமரா அமைக்கவேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து செஞ்சிக்கோட்டை நுழைவு வாயிலில் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிட்னி ஆஸ்பத்திரியில் ஆக்சிஜனுக்கு பதிலாக சிரிப்பூட்டும் வாயு செலுத்தியதால் சிசு பலி…!!
Next post இளம்பெண்களை கற்பழித்து நகைகளை பறித்த வாலிபர் மனைவியுடன் கைது: பாதிக்கப்பட்ட பலர் புகார்…!!