நேபாளத்தில் பனிச்சரிவு: சுற்றுலா சென்ற 7 தமிழர்கள் முக்திநாத் மலையில் சிக்கித் தவிப்பு..!!
Read Time:49 Second
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 17 பேர் நேபாளத்தில் உள்ள முக்திநாத் மலைக்கு சுற்றுலா சென்றனர். அங்கு, பனிச்சரிவு ஏற்பட்டதால் 3 பெண்கள் உள்பட 7 பேர் மலையில் இருந்து கீழே இறங்க முடியாமல் சிக்கிக்கொண்டுள்ளனர்.
கடுமையான பனிச்சரிவு காரணமாக மலையில் இருந்து கீழே இறங்குவதற்கான பாதை இல்லாததால் அவர்கள் கடந்த நான்கு நாட்களாக மலையிலேயே உள்ளதாகவும், அவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Average Rating