லிப்ட் திடீரென பழுதடைந்ததால் 4வது மாடியிலிருந்து தவறி விழுந்து கம்பெனி ஊழியர் பரிதாப பலி..!!

Read Time:1 Minute, 29 Second

Daily_News_5712352991105சவுகார்பேட்டை அருகே லிப்டில் திடீர் பழுது ஏற்பட்டதால் அதில் பயணம் செய்த வாலிபர், தவறி விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சவுகார்பேட்டை பெருமாள் கோயில் தோட்டம் தெருவை சேர்ந்தவர் கணபதி. அப்பகுதியில் உள்ள அப்பார்ட்மென்டின் 5வது மாடியில் குடும்பத்துடன் வசிக்கிறார். இவரது மகன் அபிஷேக்குமார் (23), தனியார் நிறுவன ஊழியர்.

நேற்று காலை 5வது மாடியிலிருந்து அபிஷேக்குமார் லிப்டில் கீழே இறங்கினார். அப்போது, திடீரென பழுது ஏற்பட்டு 4வது மாடியிலேயே லிப்ட் நின்றுவிட்டது. இதையடுத்து அபிஷேக்குமார் அவசர வழியில் இறங்க முயற்சித்தபோது 4வது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்தார். அதில் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார்.

தகவலறிந்து வந்த யானைக்கவுனி போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நிலாவிற்கு சென்று வந்த மூவர் ஒரே நோயால் உயிரிழப்பு..!!
Next post பொக்கிஷமாக பாதுகாக்கப்படும் விண்வெளி வீரர்களின் சிறுநீர்… ஏன் தெரியுமா…!!