புது வண்ணாரப்பேட்டை பஸ் நிலையத்தில் கத்தியுடன் திரண்ட கல்லூரி மாணவர்கள்: பயணிகள் அலறியடித்து ஓட்டம்…!!

Read Time:1 Minute, 59 Second

201607291500488247_College-students-clash-in-New-Washermenpet_SECVPFபுதுவண்ணாரப்பேட்டை டோல்கேட் பஸ் நிலையத்தில் இன்று காலை 9.30 மணி அளவில் கல்லூரி மாணவர்கள் 20 பேர் திரண்டு இருந்தனர்.

அதில் மாணவர் ஒருவர் கையில் கத்தியுடன் நின்று கொண்டிருந்தார். அவர்கள் ஆவேசத்துடன் இருப்பதை கண்ட பயணிகள் பீதி அடைந்தனர்.

மாணவர்கள் கத்தியுடன் அங்கும் இங்கும் திரிவதை பார்த்து பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த போலீசாரை பார்த்ததும் மாணவர்கள் ஓடினார்கள். உடனே போலீசார் மாணவர்களை விரட்டி பிடித்தனர். இதில் 6 பேர் சிக்கினர்.

விசாரணையில் அவர்கள் வினோத், சந்தோஷ், விஜய், புருஷோத்தமன், கணேசன், லோகேஷ் என்பதும், மாநில கல்லூரி மாணவர்கள் என்பதும் தெரிய வந்தது.

இவர்களுக்கும், அப்பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்துள்ளது.

இதனால் அக்கல்லூரி மாணவர்களை தாக்குவதற்காக பஸ் நிலையத்தில் காத்து இருந்தனர். தக்க சமயத்தில் போலீசார் வந்ததால் மாணவர்கள் இடையே நடக்க இருக்க மோதல் தவிர்க்கப்பட்டது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பியசேன விளக்கமறியலில்…!!
Next post மேட்டுப்பாளையம் அருகே செல்போனில் ஆபாச படம் பார்த்ததை கண்டித்த இளம்பெண் கொலை: வாலிபர் கைது…!!