தெவிநுவர ஸ்ரீ விஷ்ணு தேவாலய கொலை தொடர்பில் இருவர் கைது…!!
மாத்தறை தெவிநுவர ஸ்ரீ விஷ்ணு தேவாலயத்தில் கடந்த 2ஆம் திகதி இடம் பெற்ற படுகொலை தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாத்தறை மிரிஸ்ஸ பிரதேசத்தில் இருந்து தெவிநுவர ஸ்ரீ விஷ்ணு தேவாலயத்தில் தீமிதிப்பு நிகழ்வினை கண்டுகளிக்க வருகை தந்திருந்த 22 வயது இளைஞர் ஒருவர் கூறிய ஆயுதத்தால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
கொலை தொடர்பில் விசாரணை செய்து வந்த பொலிஸார் மாத்தறை மிரிஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த 21 மற்றும் 20 வயதுடைய இரு இளைஞர்களை கைது செய்துள்ளனர்.
படுகொலை செய்யப்பட்ட இளைஞர் ஏற்கனவே வர்த்தகர் ஒருவருடைய கொலை தொடர்பில் சம்பந்தப்பட்டவர் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
குறித்த வர்த்தகரின் நண்பர்களே தற்போது இளைஞனின் கொலையில் தொடர்பு பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating