இளைஞரை கொலை செய்து தப்பிச் சென்ற நபர்கள் கைது…!!
மாத்தறை தெவிநுவர விஷ்ணு ஆலயத்தில் இளைஞர் ஒருவரை கொலை செய்து விட்டு தப்பிச் சென்ற சந்தேக நபர்களை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.
கடந்த 27 ஆம் திகதி தெவிநுவர விஷ்ணு ஆலயத்தில் நடைபெற்ற தீ மிதிப்பு திருவிழாவில் மாத்தறை மிரிஸ்ஸ, பண்டாரமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 22 வயதான உதய மதுசங்க என்ற இளைஞன் கலந்து கொண்டார்.
இந்த இளைஞரை கொலை செய்து விட்டு, ஒருவர் தப்பிச் சென்றார். கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் மற்றும் அதற்கு உதவிய ஒருவரையும் கந்தேககெதர பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.
20 மற்றும் 21 வயதான இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உள்ளதாக கந்தேகெதர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating