வயலில் நெல் நடவு செய்த 3 பெண்கள் மின்னல் தாக்கி பலியான சோகம்…!!

Read Time:1 Minute, 49 Second

201607292024123590_3-women-killed-in-lightning-strikes-in-Bihar_SECVPFபீகார் மாநிலம் ஜமூய் மாவட்டம் சந்திரதீப் காவல் சரகத்திற்குட்பட்ட ஒரு கிராமத்தில் உள்ள வயலில் இன்று நெல் நாற்று நடவு செய்யும் பணி நடைபெற்றது. அப்போது, திடீரென பயங்கர சத்தத்துடன் இடி-மின்னல் ஏற்பட்டது. மின்னல் தாக்கியதால், வயலில் நடவு செய்துகொண்டிருந்த 4 பெண்கள் சுருண்டு விழுந்தனர்.

அவர்களில் சாவித்திரி குமாரி (18), சபிதா குமாரி (30), மலோ தேவி (35) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். பிரமிளா தேவி என்ற பெண் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

நடவுக்கு சென்ற இடத்தில் மின்னல் தாக்கி பெண்கள் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதேபோல் மோதிஹரி மாவட்டத்தில் நேற்று மின்னல் தாக்கியதில் 4 பெண்கள் பலியாகினர். 2 பேர் காயமடைந்தனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சாமியார் என்ற பெயரில் அரங்கேறும் சில்மிஷம்…. மக்களே இன்னும் ஏமாறாதீர்கள்…!! வீடியோ
Next post ஈரானில் மனைவிகளுக்கு ஆதரவாக தலையை துணியால் மறைத்து ஆண்கள் நூதன போராட்டம்…!!