விடுமுறையில் வீடு திரும்பியவருக்கு ஏற்பட்ட அவலம்..!!
தம்புள்ளை மற்றும் பகமூன ஆகிய பிரதேசங்களுக்கு இடையிலான பிரதான வீதியின் ரிதீஹெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் ஒன்றும் தனியார் பேரூந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இன்று பிற்பகல் இடம்பெற்ற இந்த வாகன விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இராணுவ வீரரொருவரே உயிரிழந்துள்ளார்.
குருநாகல் – போயகனே இராணுவ முகாமில் பணியாற்றி வரும் இராணுவ வீரர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இராணு வீரர் விடுமுறைக்காக வீடு திரும்பிக்கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating