பளையில் வாகன விபத்தில் ஒருவர் படுகாயம்..!!
கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்காட்டு சந்தி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகனவிபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் பயணித்த பார ஊர்தி ஒன்று வீதியை விட்டு விலகி குறித்தபகுதியில் அமைந்துள்ள கடைகளை சேதமாக்கியுள்ளது. குறித்த விபத்தில் வாகன சாரதி படுகாயமடைந்த நிலையில் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சாரதிநித்திரையில் வாகனம் செலுத்தியமையாலேயே குறித்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என தெரிய வந்துள்ளது.
குறித்தவாகனம்வீதியை விட்டுவிலகி குறித்த பகுதியில் அமைந்துள்ள 3கடைகளை சேதப்படுதிதியதுடன் கடைகளிற்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கர வண்டிகளை முழுமையாக சேதப்படுத்தியுள்ளது
விபத்து தொடர்பிலான விசாரணைகளை பளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating